Navarathri - Day 1
நவராத்திரி கொலு வைக்கும் முறை
Brahmins Kitchen
This blog will contain the recipes of the food that are typically cooked in a Tamil Brahmin community (Iyer & Iyengar). There is an old saying that goes like this “You are what you eat” and TamBrahm Cuisine follows the concept of shaping the personality, mood and mind of the family members.
Email: ajsriram@gmail.com
Website: iyerscorner.com
Location: Velachery, Chennai, Tamil Nadu, India
Phone: 94440-19123
Navarathri
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.
இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
நவராத்திரி வழிபாட்டு முறை - முதலாம் நாள்
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர்.
இவள் மிகவும் கோபக் காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செய்தவர்களை திருத்திநல் வழிபடுத் தவே ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக்கும ராஜ ராஜே ஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
முதலாம் படி
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்களின் பொம்மைகள்.
நெய்வேத்யம்
சர்க்கரைப் பொங்கல்